அனைத்து நிறுவனங்களும் தமது கடமைகளை நிறைவேற்றவேண்டும் – வெளிநாட்டு பணியாளர்கள் தொடர்பில் ஜனாதிபதி

Saturday, June 9th, 2018

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க பொறுப்பான அனைத்து நிறுவனங்களும் தமது கடமைகளை நிறைவேற்றவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகளும் திட்டங்களும் முறையாக அமுல்படுத்தப்படுவதற்கு அந்நிறுவனங்களில் சேவையாற்றும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் இன்றியமையாதவையாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts: