ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சீ 350 ஆவணம் அடுத்த வாரம் வெளியிடப்படும் – சட்டமா அதிபர் திணைக்களம்!

Monday, June 4th, 2018

பிணை முறிகள் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சீ 350 ஆவணம் அடுத்த வாரம் வெளியிடப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆவணத்தை பகிரங்கப்படுத்தினால் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் அதற்காக விசேட குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த குழுவின் இறுதி முடிவை ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆவணத்தைப் பகிரங்கப்படுத்துவது தொடர்பில், சபாநாயகர் கரு ஜயசூரிய தம்மிடம் வினவியதாகவும் சட்டமாஅதிபர் கூறினார்.

எவ்வாறாயினும், முறிகள் ஆணைக்குழுவின் இறுதியறிக்கையின் இரண்டாவது இணைப்பின் முதற்பிரதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலுள்ளதாக தேசிய சுவடிகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் செயலாளருக்கு கோட்டை நீதவான் பிறப்பித்த உத்தரவிற்கமையவே இந்த ஆவணம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:

சமூக வலைத்தளங்களில் வெளிவரும் செய்திகள் போலியானவை – வாடிக்கையாளர்களுக்கு இலங்கை வங்கி விடுத்துள்ள மு...
அரசாங்க அதிபர் பங்குபற்றுதலுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்து தொடர்பில் விழிப்புணர்வு செயற்றி...
தேயிலை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டில் 411.9 பில்லியன் ரூபா வருமானம் - தேயிலை ஏற்றுமதி துறை தெரிவிப்பு!

நீங்கள் கேட்ட தலைவர் நான் - நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பை நான் குறைவின்றி நிறைவேற்றுவேன் - சு...
அடுத்த மூன்று வாரங்களுக்குள் அனைத்து பல்கலைக் கழகங்களும் திறக்கப்படும் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணை...
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி - 14 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் கடற்படையினர...