இலங்கையில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை –  சீனா!

Friday, May 25th, 2018

அம்பாந்தோட்டையில் துறைமுக அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் வலயம் என்ற பெயரில், சீனா இராணுவத் தளத்தை அமைத்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை சீனத் தூதுவர் செங்ஷியுவான் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கும் போது;

இலங்கையில் சீனாவின் திட்டங்கள் தொடர்பாக பெருமளவில் ஊகங்கள் வெளியாகின்றன. ஆனால் அவற்றில் உண்மையில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்புத் தொடர்பான விவகாரங்கள் அனைத்தும், உள்ளூர் அதிகாரிகளினாலேயே கையாளப்படும் என்று உடன்பாடு செய்து கொள்ளப்பட்டிருக்கிறது. இதுஒரு கூட்டு முயற்சி. இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு 30 வீத பங்குகள் உள்ளன.

இது சீனாவின் தனிப்பட்ட முதலீட்டு வலயம் அல்ல ஏனைய நாடுகளும் முதலீடு செய்ய முடியும். நான் கூறுவதை நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இராணுவத் தளபதிகளும்உறுதிப்படுத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:

கலாசார மண்டபத்தின் நோக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்க முடியாது - சபையில் முன்னாள் முதல்லர் யோகேஸ...
இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனல் நடவடிக்கை!
ஒப்பந்தக்காரர்களின் நிலுவை சித்திரைப் புத்தாண்டுக்கு முன் முன்னர் வழங்க நடவடிக்கை - அமைச்சர் பந்துல ...

கொரோனா தொற்று நோயாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் 29 நோயாளர்கள் 15 வைத்தியசாலைகளில் அனுமதி - தேசிய த...
நாட்டில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட வேண்டுமானால் ஓர் அலகுக்கு 59 ரூபா அறவிட நேரிடும் - மானியம்...
2024 ஆம் ஆண்டு நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் - இலங்கை மத்திய வங்கியின் ஆளுந...