நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு !
Thursday, May 24th, 2018
தொடருந்து சேவையின் 3ஆம் வகுப்பு பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஊதிய பிரச்சினை, வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளாமை உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
இந்த போராட்டத்தில் தொடருந்து நிலைய சமிக்ஞையாளர்களும் இணைந்து கொள்ளவிருந்த போதும், அவர்கள் அதிலிருந்து விலகியுள்ளனர். எவ்வாறாயினும், இந்த போராட்டத்தினால் தொடருந்து பயணத்திற்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
கடந்த ஆட்சியாளர்கள் கடன் பெற முடியாமல் பணத்தை அச்சிட்டனர் - அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு...
தொழில்நுட்பத்திற்கு அடிமையாகி இருப்பது குழந்தைகள் கிட்டப்பார்வை கொண்டவர்களாக இருக்க முக்கிய காரணம் -...
முன்னாள் ஜனாதிபதி ரணிலின் கருத்தை வலுவாக்கும் இன்நாள் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்!
|
|
|


