இயற்கையின் மாற்றம் : மக்களே எச்சரிக்கை!
Friday, May 18th, 2018
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் எதிர்வரும் சில தினங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இன்றைய தினம் மத்திய , சப்ரகமுவ , ஊவா , மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் போன்று காலி , மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.
குறித்த பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாக்கூடும் என்பதோடு , குறித்த சந்தர்ப்பங்களில் மின்னலால் அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இதேவேளை , அதிக மழை காரணமாக உடவளவை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் நேற்று இரவு திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொலிஸாருடன் வடக்கு மக்களும் இணைந்து செயற்ப்பட வேண்டும்!
அடுத்த மாத ஆரம்பத்தில் அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும் - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
இலங்கையில் 4 இலட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா - 10 ஆயிரத்து 504 பேர் உயிரிழப்பு!
|
|
|


