நாடு முழுவதும் பத்து இலட்சம் ஆஸ்மா நோயாளர்கள்!
Thursday, May 17th, 2018
இலங்கை முழுவதும் பத்து லட்சம் ஆஸ்மா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் என்று விசேட வைத்திய நிபுணர் டொக்டர் கீர்த்தி குணசேகர தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் இந்த நோயினால் ஆயிரம் நோயாளர்கள் உயிரிழப்பதாகவும் பாடசாலை செல்லும் 25 சதவீதமானோருக்கு இந்தநோய்க்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்மா நோய்க்கான சிகிச்சையை அரசாங்க வைத்தியசாலைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் டொக்டார் கீர்த்தி குணசேகர குறிப்பிட்டார்
Related posts:
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கையளிக்கவுள்ள இரகசியம்!
மக்களையும் சமூகத்தையும் அறிந்திராதவர்களே எம்மீது அவதூறு பரப்ப முயற்சிக்கின்றனர் - ஈ.பி.டி.பியின் ஊட...
பூநகரி சூரியகல மின்னுற்பத்தி திட்டம் - பிரதேச மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் கலந்துரையாடல்!
|
|
|


