போதையில் நிலைதடுமாறி விபத்தில் சிக்கிய பெண்கள் – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!
Wednesday, May 16th, 2018
மது போதையில் விபத்துக்குள்ளான இரு இளம் பெண்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று யாழ்ப்பாணம் இருபாலைச் சந்தியில் நடந்துள்ளது. 21 மற்றும் 25 வயதுடையவர்களே விபத்துக்குள்ளாகியுள்ளனர். பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளனர். அவர்களை மக்கள் மீட்டபோது இருவரும் நிலை தடுமாறியவாறு இருந்துள்ளனர். இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பெண்களை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்ப்பித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
மீண்டும் யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு தயார்!
சகல சமுர்த்தி அதிகாரிகளுக்கும் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை!
மானிப்பாய் பிரதேச சபை செயலாளருக்கு எதிராக உதவி உள்ளூராட்சி ஆணையாளரிடம் சபை உறுப்பினர்களால் முறைப்பாட...
|
|
|


