யாழ். மாவட்டத்தில் 860 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் வாழைச் செய்கை!
Wednesday, May 16th, 2018
யாழ் மாவட்டத்தில் சுமார் எண்ணூற்றி 60 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் வாழைச் செய்கையாளர்கள் வாழைச் செய்கையில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தூர், உரும்பிராய், உடுவில் ஆகிய விவசாய போதனாசிரியர் பிரிவுகளிலேயே கூடுதலாக செய்கையாளர்கள் இந்த வாழை செய்கையில் ஈடுபட்டும் வருகின்றனர்.
தற்போதைய பருவகாலத்தின்போது அனேகமான செய்கையாளர்கள் இந்த வாழைச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் கூடுதலானோர் கதலி, இதரை செய்கையிலேயே ஈடுபட்டு உள்ளனர்.
அத்துடன் புதிய இன வாழை செய்கை அறிமுகப்படுத்தப்பட்டு அந்த செய்கையை ஊக்குவிக்கும் விவசாயத் திணைக்களம் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Related posts:
ஓட்டுனர்கள் இல்லாமல் இயங்கும் ரயில் அறிமுகம்!
பனிக்கட்டிகள் சூடாகும் அபாயம் - சுவிஸ் நாட்டுக்கு ஆபத்தா?
சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம்!
|
|
|


