டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!
Friday, May 11th, 2018
விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு செயலனி தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் 700 குழுக்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீரதெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 17,580 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 60 வீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும்வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் இதற்காக விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்றுமுன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
மயிலிட்டிப் பிரதேசத்தின் சில பகுதிகளை விரைவில் விடுவிக்க இணக்கம் தெரிவித்த பலாலி இராணுவத் தளபதி?
பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி விடுக்கப்பட்டுள்ளது!
யாழ் பல்கலையில் திருக்குறள் தேர்வு!
|
|
|


