கறிமுருங்கைச் செய்கை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு!
Friday, May 11th, 2018
யாழ்ப்பாணக் குடாநாட்டில் விவசாயிகள் மேற்கொண்ட கறிமுருங்கைச் செய்கை மூலம் அதிக விளைச்சல் கிடைத்துள்ளது. தற்போதைய கடுமையான வறட்சி, வெப்பநிலை போன்ற காலநிலைக்கு ஏற்றவாறு கறிமுருங்கைகள் அதிகளவில் காய்த்துள்ளன என்று விவசாய திணைக்களம் தெரிவித்தது.
குடாநாட்டில் பல்வேறு இடங்களிலும் பரவலாக செய்கையாளர்கள் இந்தச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அவை அறுவடை செய்யப்படுகின்றன. சந்தைகளுக்கு அவை தாராளமாக வந்து சேர்கின்றன. இதே சமயம் வன்னிப் பிரதேசத்தில் இருந்தும் பெருமளவு கறிமுருங்கைக் காய்கள் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படுகின்றன என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
27ஆம் திகதி வரையில் பயணிகள் ரயில், பஸ்கள் சேவையில் ஈடுபடமாட்டாது – துறைசார் திணைக்களங்கள் அறிவிப்பு!
மாணவர்களுக்கு இலவச பயிற்சி புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்!
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான சட்ட வரைவு 3 மாதங்களுக்குள் - அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு...
|
|
|


