அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து அறிக்கை கோருகிறார் வடக்கின் ஆளுநர்!

Thursday, April 26th, 2018

மோசடி தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உண்மை நிலை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மாகாண பிரதம செயலாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே உத்தரவு  பிறப்பித்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விசாரணையின் பின்னரே எந்த முடிவுக்கும் வர முடியும் என்று வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Related posts:


இலங்கையில் இரண்டாம் கட்டத்தில் கொரோனா: அடுத்த இரண்டு வாரங்களும் மிக ஆபத்தானவை என எச்சரிக்கும் வைத்தி...
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 1000 ரூபா பொதி மே 2 முதல் வழங்க ஏற்பாடு - வர்த்தக அமைச்சர் பந்த...
சர்வதேச கடன் வழங்குநர்கள் அடுத்த வாரம் கூடி இலங்கை போன்ற நாடுகளின் மறுசீரமைப்பு திட்டங்களில் உள்நாட்...