தனியார் வகுப்புக்கு வருமாறு மாணவர்களை அச்சுறுத்தும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் எச்சரிக்கை!
Thursday, April 19th, 2018
தனியார் வகுப்புக்கு வருமாறு மாணவர்களை அச்சுறுத்தும் ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தரம் 5 க்கான புலமைப்பரிசில் பரீட்சையை இலக்கு வைத்து மேலதிகமாக இடம்பெறும் வகுப்புக்கு, மாணவர்களை இணைத்து கொள்வதற்காக விடுக்கப்பட்ட அச்சுறுத்துதல் தொடர்பில்பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த நிலமையை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வரவு செலவுத்திட்டம் 110 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!
இலங்கைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி பாராட்டு!
கோபா குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண தெரிவு !
|
|
|


