அவசர காலநிலை சட்டம் நீடிக்கப்பட மாட்டாது!
Tuesday, March 13th, 2018
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தி இருந்த அவசர காலநிலை எதிர்வரும் 15ம் திகதி முடிவுக்கு வரவுள்ள நிலையில், குறித்த அவசர காலநிலையினை மேலும் நீடிக்க தற்போது அவசியமில்லை என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுவதாலும், மக்கள் வீணாக அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக ஜனாதிபதியினால் கடந்த 06ம் திகதி முதல் பத்து நாட்களுக்கு அவசர காலநிலை பிரகடனப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சேதனப் பசளைப் புரட்சி திட்டம் எக்காரணம் கொண்டும் பின்வாங்கப்பட மாட்டாது - நிதி அமைச்சர் பசில் ராஜபக...
நாட்டினை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோள் எதிர்க்கட்சிகளிடம் கிடையாது - அமைச்சர் ஹரின் பெர்னாண்ட...
கோட்டாபய ராஜபக்ச செய்த தவறையே அநுரவும் சஜித்தும் செய்கின்றனர் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றச்சா...
|
|
|


