அரச நில அளவையாளர்கள் சங்கத்தினர் தொடர் பணிப்புறக்கணிப்பில்!
Saturday, March 3rd, 2018
எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் அரச நில அளவையாளர்கள் சங்கத்தினர் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்க நிறுவனமொன்றுக்கு இலங்கையின் காணி அளவீட்டுப் பணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படஉள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் துமிந்த உடுகொட தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த நடவடிக்கைக்கு எதிராக உள்ளக ரீதியான பணிப்புறக்கணிப்பில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழ். மத்திய கல்லூரி உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில்!
இனப்பிரச்சினை குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது - சமன் ரத்னப்பிரிய தெரிவிப்பு...
நாடு முழுவதும் சோதனை - 431 தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் பறிமுதல்!
|
|
|


