இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து இந்தியா மகிழ்ச்சி!
Monday, March 14th, 2016
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, புதுடில்லி விஜயத்தின் போது பிரணாப் முகர்ஜியை சந்தித்துள்ளார். இதன்போது தாம் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ளதாக முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியத்தில் பலமிக்க நாடு என்ற வகையில் இந்தியா தமது அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துக்கொள்ள தயாராக உள்ளதாகவும் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். புதுடில்லியில் மார்ச் 11 முதல் 13 வரை இடம்பெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காகவே அமைச்சர் ரவி கருணாநாயக்க அங்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.ய
Related posts:
டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சகல மக்களின் பங்களிப்பும் அவசியம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறு...
வெளிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி!
எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவை திறப்பதற்கு தீர்மானம்!
|
|
|


