சீனாவின் போட் சிட்டியில் இந்தியாவும் முதலீடு!
Sunday, June 5th, 2016
இலங்கையில் சீனாவினால் அமைக்கப்படவுள்ள போட் சிட்டி நிர்மாணத்தில் இந்திய நிறுவனங்களும் முதலீடுகளை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது இலங்கை, இந்தியா, சீனா என்ற மூன்று நாடுகளுக்குள் ஏற்பட்ட முக்கிய திருப்பம் என்று இலங்கையில் அரச செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
முன்னதாக போட் சிட்டி திட்டத்துக்கு இந்தியா எதிர்ப்பை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில் போட் சிட்டியின் விற்பனைப் பிரிவு தலைவராக உள்ள லியாங் தௌ கடந்த வாரம், இந்திய முதலீட்டாளர்களுடன் சந்திப்புக்களை நடத்தினார்.
இதன்போது ஐந்து இந்திய நிறுவனங்கள் போட்சிட்டியில் முதலீடுகளை மேற்கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளன.
Related posts:
கொரோனா தொற்றின் சமூக பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் அ...
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 36 பேருடைய சடலங்கள் வெளிமாவட்டத்தில் தகனம் – பணிப்பாளர...
கடதாசி தட்டுப்பாடு - ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் முறைப்படுத்த முடிவு - போக்குவரத்து அமைச்சர் தி...
|
|
|


