அபாய கட்டத்தில் நாடு:  மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அவசர கடிதம்!

Saturday, February 17th, 2018

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியலில் நெருக்கடி நிலைமைகள் குறித்து, மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரர் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் – “நாட்டின் தற்போதைய அரசியல் மோசமான நிலைமையில் சென்றுகொண்டிருக்கின்றது. எனவே, இதற்கு உரிய தீர்வை விரைவாக எடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். தற்போதைய நிலையில் நாடு ஒரு அபாய கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.

2015 ஆம் ஆண்டு, அரசாங்கம் நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதனை செய்யாமையின் காரணமாகவே தேர்தலில் தோல்வியை சந்திக்க நேர்ந்துள்ளது” என அந்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


யாழ் மாவட்ட அரச அதிபர் பதவியில் இருக்கும்வரை மக்களுக்கும் நியாயமான தீர்வுகள் கிடைக்கப்போவதில்லை - ஜன...
எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் அரச பணியாளர்களின் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட வேண்டும் ...
தலைவர்கள் உரிய நேரத்தில் கேட்கவேண்டியவற்றை கேட்காமையின் தவறினாலேயே இலங்கையில் இனப் பிரச்சினை உருவெடு...