எதிர்வரும் வாரம் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் வெளிவரும்!
Thursday, February 15th, 2018
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் எதிர்வரும் வாரம் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முறை உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதால் உள்ளாட்சி மன்றங்களில் கூட்டங்களை நடத்தும்போது இடவசதிகள் தொடர்பான பிரச்சினை ஏற்படும் என பெப்பரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் சில பிரதேச சபைகளில் குறுகிய எண்ணிக்கையிலானவர்களே ஒன்றுகூடுவதற்கான நிலைமை உள்ளது. எனவே அத்தகைய உள்ளூராட்சி அதிகார சபைகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் என ரோஹன ஹெட்டியாரச்சி வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
தாக்குதலுடன் தொடர்புடைய எவரும் சட்டத்திவிருந்து தப்பிக்க முடியாது – உயிர்த்த ஞாயிறு வாழ்த்துச் செய்த...
பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!
தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - கல்வி இராஜாங்க அமைச்சர் தெ...
|
|
|


