இலங்கை அணியில் குசல் ஜனித்துக்கு பதிலாக குசல் மெண்டிஸ்!
Thursday, February 15th, 2018
நாளை ஆரம்பமாகவுள்ள இலங்கை பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 போட்டித் தொடரில் இருந்து இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா விலகியுள்ளார்.
அவருக்கு ஏற்பட்ட உபாதை குணமாகாததால் அவரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இரண்டு போட்டிகள் அடங்கிய இந்த இருபதுக்கு 20 தொடருக்கான 15 பேர் அடங்கிய அணியில் குசல் ஜனித் பெரேரா உள்வாங்கப்பட்டிருந்தார். எனினும் இந்த போட்டியில் அவர் பங்கேற்க முடியாததால் அவருக்கு பதிலாக அந்த அணியில் குசல் மெண்டிஸ் இணைக்கப்பட்டுள்ளார்.
Related posts:
புதிய மைல்கல்லை எட்டிய இலங்கை வீரர்!
இலங்கையுடனான போட்டிகளில் இருந்து ஹஷிம் அம்லா விலகல்!
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி!
|
|
|


