உள்ளூராட்சி மன்றங்களின் கன்னியமர்வு அடுத்தமாதம்!

Wednesday, February 14th, 2018

உள்ளூராட்சி மன்றக் கன்னியமர்வு நாளை மறுதினம் 15 ஆம் திகதி நடைபெறும் என்று அரசிதழில் குறிப்பிடப்பட்டிருந்த போதும் அது தற்போது பிற்போடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமையே கன்னியமர்வு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவால் வெளியிடப்பட்ட அரசிதழில் பெப்ரவரி மாதம் சகல உள்ளூராட்சி மன்றங்களினதும் கன்னியமர்வு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அது பிற்போடவேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி ஆணையாளர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள உறுப்பினர்களுக்கு கன்னியமர்வு 7 நாள்களுக்கு முன்னர் அறிவிக்கவேண்டும். உள்ளூராட்சித் தேர்தல் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்றது என்பதால் 7 நாள்களுக்கு முன்னதாக அறிவித்தல் என்பது சாத்தியமில்லாதிருந்தது.

அத்துடன் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் விகிதாசார உறுப்பினர்களின் பெயர்கள் அரசிதழில் இன்னமும் பிரசுரிக்கப்படவில்லை. இவற்றால் ஏற்படும் தாமதத்தைக் கருத்தில் கொண்டு அடுத்த மாதம் 2 ஆம் திகதி சகல உள்ளூராட்சி மன்றங்களினதும் கன்னியமர்வை நடத்த உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

Related posts:

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு - தேர்தல்கள் ஆண...
பண்டிகை காலத்தில் மக்களை ஏமாற்றும் கும்பல் குறித்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண எச்ச...
புதிதாக கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் ஆரம்ப...

தமிழ் மக்களுக்கான உரிமை விடயங்களில் நாம் என்றும் பின்நின்றது கிடையாது - எழுக தமிழ் பேரெழுச்சி நிகழ்வ...
இலங்கையின் கடற்கரையோரங்களை சுத்தப்படுத்த சிங்கப்பூரிடமிருந்து ஒரு இலட்சத்து 80 ஆயிரம் டொலர் பெறுமதிய...
நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் மருத்துவ காப்புறுதி - அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள்...