வீதிகளின் புனரமைப்பிற்கு இடையூறாகவுள்ள எல்லை மதில்கள், வேலிகளை அகற்றுமாறு கோரிக்கை!
Saturday, June 4th, 2016
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் NELSIP- DFAT திட்டத்தின் கீழ் புனரமைப்புச் செய்யப்படவுள்ள வீதிகளின் புனரமைப்பிற்கு இடையூறாகவுள்ள எல்லை மதில்கள், வேலிகள் ஆகியவற்றை அகற்றியுதவுமாறு நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் திருமதி- தி.அன்னலிங்கம் கேட்டுள்ளார்.
குறிப்பாக நந்தாவில் வடக்கு வீதியும், குறுக்கு- இணைப்பு வீதிகளும் மற்றும் பாரதி- விவேகானந்தா வீதிகளில் புனரமைப்பிற்கு இடையூறாகவுள்ள எல்லை மதில்கள், எல்லை வீதிகள் ஆகியவற்றை அகற்றிச் சபைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் மேலும் கேட்டுள்ளார்.
Related posts:
இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை!
இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் - பொதுமக்களுக்கு வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் எச்சரிக்கை!
அரச இயந்திரம் சரியாக இயங்கவில்லை - எஸ்.பி. திஸாநாயக்க குற்றச்சாட்டு!
|
|
|


