வைத்தியசாலையில் வைத்து சிறைக் கைதி மீது தாக்குதல் -மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Saturday, February 3rd, 2018

சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டவரை வைத்தியசாலையில் வைத்தே சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டதாக குறித்த இளைஞரின் தந்தையாரால் மனிதவுரிமை ஆணைக்குழுவில் யாழ். பிராந்திய காரியாலத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொடிகாமத்தைச் சேர்ந்த ரவிக்குமார் ஜதுர்சன் (வயது – 21) என்ற இளைஞரே காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கஞ்சா வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளைஞரே இவ்வாறு இரு தடவைகள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரின் தந்தையார் வலம்புரிக்குத் தெரிவித்துள்ளார்.

Related posts:


இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடும்? : ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்தமுடியும் - மஹிந்த தேசப்பிரிய!
ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் பிரதியொன்றை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ...
தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை – முல்லைத்தீவு மாவட்டத்தில் 6268 பேர் பாதிப்பு -524 பேர் இடைத்தங்கல் ...