வாக்காளர் அட்டையில் தவறிருந்தால் உடனடியாக அறியத் தாருங்கள் – தேர்தல் ஆணைக்குழு!

Saturday, February 3rd, 2018

வாக்காளர் அட்டைகளில் பெயர் மற்றும் அடையாள அட்டை இலக்கம் என்பன தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுமாயின் அது குறித்து உடன் அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் எழுத்து மூலமாகவும் தொலைபேசி ஊடாகவும் கிராம சேவை அதிகாரிக்கோ அல்லது மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்துக்கோ அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை அஞ்சல்மூலம் தற்போது கிடைத்திருக்க வேண்டும். அவ்வாறு கிடைக்காதவர்கள் தமது பிரதேச அஞ்சல் நிலையத்திற்குச் சென்று வினவுவதன் மூலம் அதனைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


வியாழன் அன்று அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதி நியமனம் - 120 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும்...
காதலர் தினத்தில் விழிப்புடன் இருக்கும் காவல்துறையினர் - விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு என காவல்த...
டீசல் விலை 20 ரூபா குறைந்தால் மட்டுமே பஸ் கட்டணம் குறையும் - தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவி...