யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தக சந்தை இன்று ஆரம்பம்!
Friday, January 26th, 2018
யாழ்பாணத்தில் வர்த்தகச்சந்தை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்த 3 நாட்கள் வரை மூன்று நாட்கள் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஒன்பதாவது முறையாக இந்த சர்வதேச வர்த்தகச்சந்தை ஆரம்பிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
300 இற்க மேற்பட்ட விற்பனை நிலையங்கள் கலந்துகொள்ள விருப்பதுடன் இந்தியாவின் வர்த்தக தொழிற்துறையின் மன்றங்களை ஒன்றிணைத்த அசோக் சாம் அமைப்பிலுள்ள 75 நிறுவனங்கள் இம்முறை நேரடியாக கலந்து கொள்ளவுள்ளன.
இவற்றுள் உள்@ர் உற்ப்பத்திப்பொருட்களுக்கான கண்காட்சியும் இடம் பெற ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
மேலும் பாடசாலை சீருடையில் வரும் மாணவர்களுக்கு கண்காட்சி இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படும் என்று கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Related posts:
சாவகச்சேரியில் இரு மோட்டார்ச் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் படுகாயம்!
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்; மகப்பேறு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம்!
தோல்வியுற்ற உள்நாட்டு பொறிமுறைகளை கைவிட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் அனுர அரசுக்கு வலியுற...
|
|
|


