இலங்கைக்கு சர்வதேச நிறுவனங்கள் ஒத்துழைப்பு!
Thursday, January 18th, 2018
இலங்கையில் போதைப்பொருள் வணிகத்தை ஒழிப்பதற்கு சர்வதேச நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக சட்டஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகலரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்கவில் நடைபெற்ற பொலிசாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய 928 கிலோ கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளை நிர்மூலமாக்கும் நடவடிக்கையின் போது அமைச்சர்இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பெருமளவு போதைப்பொருட்கள் கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் மூலம் சிக்கியிருந்தன. இவற்றின் பெறுமதி 3 ஆயிரத்து 400கோடியை எட்டுகின்றது.
Related posts:
யாழில் சட்டத்தை மீறிச் செயற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கெதிராக 10 மாதங்களில் 749 வழக்குகள்!
சேனா படைப்புழுக்களின் தாக்கம் குறைகிறது!
பரிந்துரை கிடைக்க பெற்றவுடன் மரக்கறிகளுக்கான உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி - உர செயலாளர் காரியாலயத்...
|
|
|


