இலங்கையில் ஒரே தேசம் என்ற தொனிப்பொருளில் இந்த வருட சுதந்திர தினம்!
Wednesday, January 17th, 2018
ஒரே தேசம் என்ற தொனிப்பொருளில் இந்த வருட சுதந்திர தினத்தை கொண்டவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை நடைபெறவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானிய ரோயல் குடும்பத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக எலிசபத் மகாராணியின் இளைய மகன் இளவரசர் எட்வர்ட் பங்கேற்கவுள்ளார்.
அத்துடன் இந்த சுதந்திர தினத்தில் புதிய சின்னம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று கொழும்பு மாநகராட்சி சபையின் கலாசார மற்றும் இசை நிகழ்ச்சிகள் காலி முகத்திடலில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல்களுக்கு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தி – உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து த...
முகக்கவசங்கள் அணிவது தொடர்பில் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!
வடக்கு மார்க்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் தொடருந்து சேவையின் பயண நேரத்தில் இன்றுமுதல் மாற்றம்!
|
|
|


