வாக்குச்சீட்டில் இந்த முறை ஒரே இடத்தில் மட்டும் புள்ளடி!
Saturday, January 13th, 2018
உள்ளுராட்சித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச்சீட்டில் ஒரே ஒரு இடத்தில் மாத்திரமே புள்ளடியிட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் பணியகத்தில் நடந்த கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர், வாக்குச்சீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளடிகள் இடப்பட்டிருந்தால், அந்த வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும்.
வாக்குச்சீட்டில் விருப்பு வாக்குகளை அளிப்பதற்கான கட்டங்களோ இடைவெளிகளோ இடம்பெற்றிருக்காது.
வாக்காளர்கள் அரசியல்கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு எதிரேதான் புள்ளடியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
திருகோணமலை வரோதயநகர் கந்தையா உள்ளக வீதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் செப்பனிடப்பட்டது...
யாழ்ப்பாணத்தில் குருநகர் பகுதி முடக்கம் : வெளியாட்கள் உள்நுளைய தடை - பொலிஸார், இராணுவம் குவிப்பு!
தேசிய முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியானது மற்றுமொரு விசேட வர்த்தமானி...
|
|
|


