இரண்டு விமானங்கள் மோதி விபத்து!
Sunday, January 7th, 2018
கனடாவின் டொரொன்டோ சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானமொன்று மற்றுமொரு ஜெட் விமானமொன்றில் மோதியதில் விமானத்தின் இறக்கை தீப்பற்றி எரிந்துள்ளது.
எவ்வாறாயினும் , விமானத்தில் பயணிக்கவிருந்த 168 பயணிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் 6 பேர் பாதிப்புக்கள் எதுவும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளனர்.
போயிங் 737 -800 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.விமானம் மோதிய ஜெட் விமானத்தில் எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.டொரொன்டோ சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 5 மாதங்களில் பதிவாகும் இரண்டாவது விபத்து இதுவாகும்.கடந்த ஓகஸ்ட் மாதம் கனடா மற்றும் போலாந்து ஜெட் விமானங்களின் இறக்கைகள் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் விமானங்கள் இரண்டும் கடுமையாக சேதமடைந்த நிலையில் , எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
காபூலில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தீவிரவாத தாக்குதல்!
பிரெக்ஸிட் தொடர்பான வரைவு மசோதாவை வெளியிட்டது பிரித்தானிய அரசு!
பலி: ”ப்ளூ வேல்” விளையாட்டில் சாவுக்கட்டளை வழங்கிய 17 வயது சிறுமி கைது!
|
|
|


