யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற புதவருட சிறப்புப் வழிபாடுகளில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!
Monday, January 1st, 2018
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற புதவருடச் சிறப்புப் பூஷை வழிபாடுகளில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டார்.
குருநகரில் அமைந்துள்ள மரியன்னை பேராலயத்தில் யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இன்றையதினம் புதுவருட சிறப்பு திருப்பலி வழிபாடு நடைபெற்றது.
காலை 5.30 மணிக்கு புதுவருட சிறப்பு பூஷை வழிபாடு ஆயரின் தலைமையில் ஆரம்பமாக நடைபெற்றது. இதில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவும் கலந்கொண்டிருந்தார்.
இதனிடையே சிறப்ப பூஷை வழிபாடுகளில் கலந்தகொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தாவுக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் ஆசீர்வாதம் வழங்கி வாழ்த்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
வடபகுதியில் அத்துமீறிய கடற்றொழில் முறைமைகள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும் - செயலாளர் நாயகம்!
புகையிலையே தடைசெய்யப்பட்ட நாட்டில் கேரளக் கஞ்சாவின் வருகை சீரழிவை தருகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் ...
யாழ் - கிளிநொச்சி மாவட்ட நிலைவரங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஹேர...
|
|
|


