A/L மீள்பரிசீலனைக்கான இறுதித் திகதி வெளியானது!

Friday, December 29th, 2017

2017 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை ஜனவரி மாதம் 15ம் திகதிக்கு முன்னர் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்கலாம் என இறுதித் திகதியை பரீட்சைகள்திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் அவர்களின் பெறுபேறுகள் தொடர்பில் திருப்தியடையாத பட்சத்தில் விண்ணப்பிக்கமுடியும். இதனடிப்படையில் 163,104 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கான அனுமதியைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பரீட்சைக்கு தோற்றிய 205 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts:

கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ...
இன்றுமுதல் ஒன்லைனில் ரயில் பயண சீட்டுகளை வழங்க நடவடிக்கை - இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் ...
வடக்கு - கிழக்கில் பிரபல்யமடைய தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்த வேண்டாம் - அநுர அரசை எச்சரிக்கும் ரொஷா...