எம்.ஜி.ஆரின் நினைவுதினம் திட்டமிட்டவகையில் இடைநிறுத்தம் – ஏற்பாட்டாளர்கள் வருத்தம்!
Tuesday, December 26th, 2017
முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) மறைந்து 30 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அரசியல் நோக்கம் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எம்.ஜி.ஆர் மறைந்த 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வகள் இன்றையதினம் அனைத்துலக சமூக சேவைகள் நற்பணி பொதுப்பணி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டிருந்ததாகவும் இருந்தபோதிலும் உரிய காரணங்கள் கூறப்படாத நிலையில் நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த நிகழ்வின் தடைக்கான காரணம் அரசியல் உள்நோக்கமாக இருக்கலாம் என்றும் இதுவிடையம் தொடர்பாக அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியமானது என்றும் ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Related posts:
கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் 'புதிய வழமை' கோட்பாட்டுக்கு அமைய நாட்டின் செயற்பாடுகள் இன்று மீண்ட...
இலங்கையில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தொற்றுறுதி!
முதல் 10 மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை 5 இலட்சத்து 70 ஆயிரத்தை அண்மித்துள்ளது - சுற்றுலா அபிவிரு...
|
|
|


