யாழ்.வைத்தியசாலையில் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது!
Friday, December 22nd, 2017
யாழ்.போதனா வைத்தியசாலையில் திறந்த இதய அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சிகிச்சை வவுனியாவைசேர்ந்த 27 வயதுடைய நபருக்கே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நபர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.வெற்றிகரமாக சத்திர சிகிச்சையை மேற்கொண்ட விசேட வைத்திய குழுவிற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வாழ்த்துதெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் பலவந்தமாக இடம்பெறவில்லை - யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.ஏ.பெ...
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2903 ஆக அதிகரிப்பு - அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிப்பு!
தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் - ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு!
|
|
|


