விதிமுறைகளை மீறி பொலித்தீன் உற்பத்தியை மேற்கொண்ட 7 நிறுவனங்கள்!

Thursday, December 21st, 2017

விதிமுறைகளை மீறி பொலித்தீன் உற்பத்தியை மேற்கொண்ட 7 நிறுவனங்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

விதிமுறைகளை மீறி பொலித்தீன் உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனங்கள் தொடர்பிலான சுற்றுவளைப்புகளை கடந்த 4 ஆம் திகதி முதல் முன்னெடுத்து வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் அஜித் வீரசுந்தர குறிப்பிட்டார்.

உணவு பொதியிடும் லஞ்ச் சீட் , பொலித்தீன் பைகள் மற்றும் உணவு பொதியிடும் பெட்டிகளுக்கு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரசாங்கம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலித்தீன் பாவனை தடை தொடர்பிலான முதலாவது திட்ட அடிப்படையில் சுற்றிவளைப்புகள் மேற்கொண்டு வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் அஜித் வீரசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


காங்கேசன்துறைக்கு இன்றுமுதல் முதலாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி தொடருந்து சேவை முன்னெடு...
கச்சத்தீவில் அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை - இலங்கை கடற்படையினர் த...
கொள்கை வட்டி விகிதங்களை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!