காலஞ்சென்ற ஞானசார தேரரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!
Wednesday, December 20th, 2017
காலஞ்சென்ற யாழ்ப்பாணம் நாக விகாரையின் மூத்த விகாராதிபதி வணக்கத்திற்குரிய மீகா ஜதுரே ஞானசார தேரரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தினார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஶ்ரீநாகவிகார சர்வதேச பௌத்த மத்திய ஸ்தானத்தில் தேரரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் காலமான வணக்கத்திற்குரிய மீகா ஜதுரே ஞானசார தேரர் நீண்ட காலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து பணி செய்துள்ளார்.
பூதவுடல் தற்போது ஆரியகுளம் சந்தியிலுள்ள ஶ்ரீ நாக விகாரையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் சர்வமத குருமார்களும் மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன சமத்துவ உரிமையின் குரலாகவும் இன ஐக்கியத்தின் குரலாகவும் ஒலிப்போம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்...
நாம் மக்களுக்காக முன்னெடுத்திருந்த பெரும்பணிகளின் அறுவடைக் காலம் இது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
வடக்கில் பாரிய கடல் பாசித் திட்டம் - தேவையறிந்து உதவும் இந்தியாவிற்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்...
|
|
|





