முறைப்பாடுகளை பொறுப்பேற்க தேர்தல்கள் செயலகத்தில் தனியான அலுவலகம்!
Tuesday, December 19th, 2017
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக தேர்தல்கள் செயலகத்தில் தனியான அலுவலகமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மாவட்ட செயலக மட்டத்திலும் இவ்வாறான அலுவலகங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்துள்ளார்.
வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள் இரண்டு கட்டத்தில் இடம்பெற்ற போதும் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒரே தினத்திலேயே இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வடக்கின் முக்கிய மாவட்டமான கிளிநொச்சியில் தீயணைப்புப் படை!
விவசாயிகளுக்கு 657 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது - கமநல காப்புறுதி சபை தெரிவிப்பு!
ஹமாஸை ரஷ்ய தலைவர் புடின் ஆதரிக்கிறார் - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றச்சாட்டு !
|
|
|


