நீதிமன்றில் ஆஜராகுமாறு மஹிந்தவுக்கு அழைப்பு!

Saturday, December 16th, 2017

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவை எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஹெலப்ரிய நந்தராஜா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் இன்று ஆராயப்பட்டபோதே குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனுவில் அடங்கிய விடயங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கருத்து கோரப்பட வேண்டும் என்றும் அதன் காரணமாக அவர் உயர்நீதிமன்றில் முன்னிலையாக வேண்டியது அவசியம் என பிரதம நீதியரசர் ப்ரியசத் டெப் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் 228 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு – யாழ் சிறைச்சாலையிலிருந்தும் ஐவ...
20 ஆவது திருத்த்திலுள்ள அரசியலமைப்புக்கு முரணாக விடயங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டு...
இலங்கையில் அஸ்ட்ராசெனிகா பெற்றுக்கொண்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளியான புதிய தகவல்!

20 ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் தலைமையில் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் முக்கிய சந்...
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கை முன்னெடுப்பு - பிரதி பொலிஸ்மா ...
நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டு -  நாளைமுதல் நடைமுறைக்கு வரும் என   குடிவரவு மற்றும் குடியகல்வு த...