அமரர் பரமநாதனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை!
Wednesday, December 13th, 2017
காலஞ்சென்ற சுப்பிரமணியம் பரமநாதனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார்.
பலாலி வீதி, உரும்பிராயில் அமைந்துள்ள அன்னாரது தற்காலிக இல்லத்திற்கு இன்றையதினம்(12) சென்ற டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் தயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார்.
உடுவில் கிழக்கு சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் கொல்லங்கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் சுப்பிரமணியம் பரமநாதன் தனது 83 ஆவது வயதில் நேற்றையதினம் காலமானர். அன்னாரது இறுதிக் கிரியைகள் நாளையதினம் (13) நடைபெறவுள்ளது.
இதன்போது கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் உடனிருந்தார்.

Related posts:
அமரர் அமரர் திருமதி இராஜேஸ்வரி ஶ்ரீசந்தணராஜாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி...
தன்னிறைவை நோக்கிய விவசாய உற்பத்திகள் மேம்படுத்தப்படல் வேண்டும் - ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப...
பகட்டு மேனிக்கு பாதீட்டை எதிர்கிறாரா கஜேந்திர குமார்? – ஈ,பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்...
|
|
|
தன்னிச்சையாக செயற்படுவதை கைவிட்டு மக்களுக்கு சேவையை செய்ய முன்வாருங்கள் - ஈ.பி.டி.பியின் பச்சிலைப்ப...
மரணங்களின் போது மாநகரின் சிற்றூழிர்களுக்கு சிறப்பு இழப்பீடு வழங்க திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் –...
இழப்பீட்டை வழங்குவதில் வயல் நிலங்களின் விளைதிறன் கவனத்திற்குரியதாக உள்ளது – கிளி் - மாவட்ட ஒருங்கிணை...


