காணாமல் போன கப்பல்களை தேடும் நடவடிக்கையில் சுற்றுலா பயணிகளை ஈடுபடுத்துவது குறித்து பரிசீலனை!
Monday, December 11th, 2017
கடலில் மூழ்கி காணாமல் போன கப்பல்களை தேடும் நடவடிக்கைகளில் சுற்றுலா பயணிகளை ஈடுபடுத்துவது குறித்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் பரிசீலித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பணியகத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஆழ்கடலில் காணாமல்போன கப்பல்களை தேட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ரீதியாக கப்பல்கள் மூழ்கும் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், சுற்றுலா பயணிகளை தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.இப்படியான தீரம் மிக்க பணிகளில் ஈடுபட பல சுற்றுலாப் பயணிகள் முன்வருவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இலத்திரனியல் அனுமதி அவசியம் – முதலமைச்சர்!
முட்டையின் விலை சடுதியாக உயர்வு - , கால்நடை தீவன பொருட்களின் விலையை குறைக்க அரசு தலையிட்டால் விலையை ...
மின் உற்பத்தியில் திருப்புமுனையை ஏற்படுத்தும்வகையில் புதுப்பிக்கத்தக்க சக்திகளை ஆரம்பிக்க நடவடிக்கை ...
|
|
|


