தேர்தல் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சீ.டீ. விக்ரமரத்ன நியமனம்!
Thursday, December 7th, 2017
தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சீ.டீ. விக்ரமரத்ன தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் நியமிக்கப்பட்டுள்ளார்
சீ.டீ. விக்ரமரத்ன நிர்வாக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் அதேவேளை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய காமினி நவரத்ன அண்மையில் ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ். நீதிமன்றக் கட்டத் தொகுதி தாக்குதல் வழக்கு ஒத்தி வைப்பு!
பயங்கரவாத தாக்குதல் - தெரிவுக்குழுவில் முன்னிலையாகத் தயாராகும் பிரதமர்!
யாழ் - சென்னை விமான சேவையில் இந்தியாவின் மற்றுமொரு முன்னணி நிறுவனம் இணைந்து கொள்ள உள்ளதாக தகவல்!
|
|
|


