நெடுந்தீவில் நவீன வசதிகொண்ட நங்கூரமிடும் தளம் அமைக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Wednesday, December 6th, 2017

சுமார் ஆயிரத்து 200 கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்ற நெடுந்தீவில், ஒரு நாள் படகுகள் சிறிய படகுகள் தெப்பங்கள் என 600க்கும் மேற்பட்ட மீன்பிடிக் கலங்கள் உள்ளன. இந்த மீன்பிடிக் கலங்களைப் பாதுகாப்பாக நங்கூரமிட்டு தரித்து வைப்பதற்கும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக கரை சேருவதற்கும் நங்கூரமிடும் தளமோ அல்லது ஏனைய பாதுகாப்பான வசதிகளோ இல்லாதுள்ளது.

இதன் காரணமாக காற்று பலவாக வீசுகின்ற காலங்களில் இத்தொழிலாளர்களது படகுகள் அறுத்துக் கொண்டு பாறைகளுடன் மோதுண்டு சேதமாகி விடுகின்றன. எனவே நெடுந்தீவுப் பிரதேசத்தில் வசதியானதொரு நங்கூரமிடும் தளம் அமைக்கப்பட வேண்டியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மின்வலு புதுப்பிக்கத்தக்க சக்தி பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி கடந்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அபிவிருத்தி ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

வடக்கின் தொழில்துறை முயற்சிகளுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
யாழ். பல்கலைக்கழக மாணவர்களது நடைபயணம் வெற்றியளிக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா எம்.பி.தெரிவிப்பு!
இனவாதத்தை தூண்டும் வகையில் உரை நிகழ்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது – யாழில் தேசிய மக்கள் சக்தியின் தல...

தகுதிகாண் அடிப்படையில் பதவி உயர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதா? - அமைச்சர் அர்ஜூன ரணது...
வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகரித்த பலத்தை மக்கள் எமக்கு வழங்கினால் தமிழ் மக்களின் அபிலாஷைகள் அனை...
சாத்தியமாக்கப்பட்டது புலிக்குளம் நீர்விநியோகத் திட்டம் - யாழ் பல்கலைக்கழக பேரவை அமைச்சர் டக்ளசுக்கு ...