இலங்கை வீரர்கள் செய்தது சரியே – இந்திய மருத்துவர்!
Tuesday, December 5th, 2017
புதுடில்லியில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வீரர்கள் வளி மாசடைதலைக் காரணம் காட்டி போட்டியை இடைநிறுத்தியது சரியானதே என இந்திய மருத்துவ நிபுணர் பிரசாந்த் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இந்தியத் தலைநகர வளிமண்டலம் பெரிதும் மாசுபட்டுள்ளது. குறித்த தினத்தன்று மிகவும் மோசமான விதத்தில் வளி மாசுபட்டிருந்தது. இதன் காரணமாக இலங்கை வீரர்கள் மூக்கையும் வாயையும் மறைக்கும் மாஸ்க் அணிந்து விளையாடினார்கள்.
ஒரு கட்டத்தில் போட்டி இடைநிறுத்தப்பட்டது. இது பற்றி கருத்து வெளியிட்ட மருத்துவ நிபுணர் பிரசாந்த் சக்சேனா, இத்தகைய சூழலில் எவரும் விளையாட முடியாது என்றார்.
வளியில் பெரிதும் மாசுத் துகள்கள் இருந்தன. இது சுவாசிப்பதில் சிரமத்தையும், இருமலையும் ஏற்படுத்துமென டொக்டர் சக்சேனா குறிப்பிட்டார்.
Related posts:
சமபோஷா கிண்ண உதைப்பந்தாட்டம் சென்.ஹென்றியரசர் கல்லூரி வெற்றி!
சாமர சில்வா உள்ளிட்ட வீரர்களிடம் விசாரணை நடத்தப்படும்- தயாசிறி ஜயசேகர!
எதிர்பார்த்த வீரர்கள் கிடைத்துள்ளனர் - T - 20 உலக கிண்ணம் குறித்து இலங்கையின் தலைவர் வனிந்து ஹசரங்க...
|
|
|


