தெல்லிப்பழையில் தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பம்!
Wednesday, November 22nd, 2017
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையில் தொழிற்பயிற்சி நிலையமொன்று தெல்லிப்பழையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறித்த தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படவுள்ள பயிற்சி நெறிகளுக்கு பயிலுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
இத் தொழிற்பயிற்சி நிலையத்தில் நீர்க்குழாய் பொருத்துனர், மரவேலைத் தொழில் நுட்பவியலாளர், விவசாய உபகரணம் திருத்துநர் மற்றும் கட்டட நிர்மாண உதவியாளர் ஆகிய பயிற்சி நெறிகள் இடம்பெறவுள்ளதுடன் பயிலுநராக இணைய விரும்புவோர் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலுள்ள மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் ஏற்கனவே கைதடி, காரைநகர், சுன்னாகம், பண்டத்தரிப்பு, பருத்தித்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீனாவின் பொறிக்குள் நாங்கள் இல்லை -அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு!
அடுத்த ஐந்து ஆண்டுகளில் விளையாட்டு மூலம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட இலக்கு – அமைச்சர் நாமல...
சர்ச்சைக்குரிய கண்புரை சத்திரகிசிச்சை விவகாரம் - இந்தியாவிடம் இழப்பீடு கோரியது இலங்கை!
|
|
|
“சிமாட் போல்” ஒப்பந்தத்தில் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் பாரிய மோசடி – ஆணையாளரின் அனுதியின்றி பெர...
அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்களுக்கான இழப்பீடுகள் வழங்கிவைப்பு!
யாழ் - மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோய் தொற்று மிக வேதனையை தருகின்றது - மாவட்ட அரச அதிபர் சிவப...


