மதுவரி உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது!
Tuesday, November 14th, 2017
மட்டக்களப்பு – கல்லடியில் உள்ள மதுவரித் திணைக்களத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர், கஞ்சா வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று முன்தழனம் காத்தான்குடி நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என, மட்டக்களப்பு குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதுவரித் திணைக்கள உத்தியோகத்தரிடமிருந்து, விற்பனைக்காக கொண்டு சென்ற 500 கிராமுக்கும் கூடுதலான கஞ்சா மீட்கப்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர், கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றார் எனக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மதுவரித் திணைக்கள உத்தியோகத்தரை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
பிறப்பு,இறப்பு, விவாகம் சான்றிதழ்களின் திருத்தி அமைக்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் - மு...
கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் - பொதுமக்களிடம் கொரோனா செ...
இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெணியான் காலமானார்!
|
|
|
வடமராட்சி குண்டு வெடிப்பு தொடர்பில் 3 கோணங்களில் தீவிர விசாரணை - பொலிஸ் பேச்சாளர் சாலிய சேனாரட்ண தெர...
யாழ்ப்பாண மாவட்ட பட்டதாரி பயிலுனர்களாக உள்வாங்கப்பட்ட 2078 பேரில் இதுவரை பேர் மட்டுமே பொறுப்பேற்றுள்...
அத்தியாவசியச் சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நிறுவனங்களின் பணிகள் தொடர்பில் அந்நிறுவனங்களின் தலைவ...


