கொன்சியுலர் பிரிவினால் அறவிடப்படும் புதிய கட்டணங்கள் !
Saturday, November 11th, 2017
அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் வெளிவிவகார அமைச்சின் கொன்சியுலர் பிரிவினால் வழங்கப்படும் ஆவணங்களுக்கு அறவிடப்படும் கட்டணம் தொடர்பான விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்களை வெளிவிவகார அமைச்சின் கொன்சியுளர் பிரிவில் சான்றுபடுத்துவதற்கு 500 ரூபாவும், வெளிநாட்டவர்களாயின் 1500 ருபாவும் அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதிக்காக வழங்கப்படும் சான்றிதழ்களை சான்றுபடுத்திக்கொள்ள 6000 ரூபாவும் ஏனைய ஆவணங்களுக்கு 800 ரூபாவும் அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்றிரவு 10 மணிமுதல் 30 மணிநேர நடமாட்ட முடக்கம் - மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை என இராணுவத் த...
வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் - சிவில் விமான சேவைகள் அதிகாரசப...
வாகன வருமான அனுமதிப் பத்திரம் குறித்து வெளியான விசேட அறிவிப்பு!
|
|
|


