அமுலுக்கு வந்தது 25000 ரூபா தண்டப்பணம்!
Thursday, November 2nd, 2017
வீதிச் சட்ட மீறல்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 25,000 ரூபா தண்டப்பண சட்டம் நேற்று(01)முதல் அமுலாவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவிப்பு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் வெளியிடப்பட்டுள்ளது.
போதையில் வானத்தை செலுத்துதல், காப்புறுதி சான்றிதழ் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனத்தை செலுத்துதல் , ரயில் கடவைகளில் கவனயீனமாக வாகனங்களை செலுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு குறித்த இந்த தணடப்பணம் விதிக்கப்படவுள்ளது.
இன்னும், வயது குறைந்த சிறுவர்கள் வாகனங்களை செலுத்துவதில் ஊக்குவிக்கப்படும் பட்சத்தில் அதற்காக 25,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா வைரஸ்: மேலும் இருவர் ஐ.டி.எச் மருத்துவமனையில்!
உக்ரைனிய அதிபர் ஜெலன்சிக்கு எதிராக உள்ளக சதி - புலனாய்வுத் துறை தலைவர், அரச வழக்குத்தொடுனர் அதிரடி ந...
பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆயிரத்து 300 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு - விற்பனையாளர்களுக்கு எதிராக...
|
|
|


