மதம் சார்ந்த பாடங்களுக்காக 2,643 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை!
Sunday, October 29th, 2017
மதம் சார்ந்த பாடங்களைக் கற்பிப்பதற்கு புதிதாக 2,643 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.
மதம் சார்ந்த பாடநெறிகளைப் பூர்த்தி செய்தவர்களையும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களையும் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சைவ சமயம், கத்தோலிக்கம், இஸ்லாம், பௌத்தம் உள்ளிட்ட பாடங்களைக் கற்பிற்கும் ஆசிரியர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகாரம் அரசாங்க சேவை ஆணைக்குழுவிடம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்தது.
இந்த நியமனங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்களை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளிடவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது
Related posts:
நாடாளுமன்றத்தைப் பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு - நாடாளுமன்ற அலுவல்கள் பற்...
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் துறைசார் அமைச்சர் ...
வற் வரி அதிகரிப்பு கொள்கை - 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும் - முன...
|
|
|


