பாதிக்கப்பட்ட மாணவி தொடர்பில் பொய்யான தகவலை வெளியிட்ட அதிபருக்கு எதிராக விசாரணை!  

Saturday, October 21st, 2017

கர்ப்பமடைந்துள்ளார் என பொய்யான தகவலின் பேரில் மாணவியொருவரை பாடசாலையில் இருந்து நீக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, குறித்த பாடசாலையின் அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர் பதவி நீக்கப்படுவார் என மாகாண கல்விப் பணிப்பாளர் நிர்மலா ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.கெகிராவை கல்வி வலயத்தின் மடாடுகம ரேவத வித்தியாலயத்தின் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவியொருவர் கர்ப்பமுற்றிருப்பதாக தெரிவித்து அவரை பாடசாலையில் இருந்து நீக்கிய சம்பவம் தொடர்பாக குறித்த பாடசாலையின் அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

Related posts:

மீண்டும் தீவிரமடையும் கொரோனா தொற்று - நாட்டு மக்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளுமாறு அரச வைத்திய அதி...
இந்திய மீனவர்களின் அத்துமீறல் புதிதல்ல - செய்திகளை வெளியிடும்போது தமிழ் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட...
இந்திய துணைத்தூதுவர், வடக்கு மாகாண ஆளுந சந்திப்பு - இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரும் ஆளுநருடன் கல...