தீவகத்தின் மகுடத்தை துறையூர் ஐயனாருக்கு வழங்கிவைத்தார் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, October 18th, 2017

சமூகத்தை நல்வழிப்படுத்டுதுவதில் விளையாட்டின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. அதனை உணர்ந்துகொண்டு இளைய சமூகத்தினர் எதிர்காலங்களில் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தீவக கிண்ணம் 2017 உதைபந்தாட்டம் வேலணை ஐயனார் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் ஐயனார் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

மின்னொளியில் நடத்தப்பட்ட இறுதியாட்டத்தில் புங்குடுதீவு சண்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்திறிகும் வேலணை துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையே நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்த சிறப்பித்து பரில்களை வழங்கிவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒரு சமூகம் வளர்ச்சியும் காணவேண்டுமாயின் கல்வித்துறைக்கூடாக மட்டும் சாதித்துக்கொள்ள முடியாது. மாறாக விளையாட்டுத்துறையும் பக்கபலமாக இருக்கும் நிலையில் அதனை உணர்ந்துகொண்டு இளைய சமூகத்தினர் மட்டுமல்லாது பெரியவர்களும் ஒருங்கே இணைந்து செயற்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறித்த இறுதியாட்டத்தில் புங்குடுதீவு சண்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்திறிகும் வேலணை துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையேயான பொட்டியில் துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகம் 4:0 என்ற அடிப்படையில் வெற்றியை தனதாக்கி திவகத்தின் மகுடத்தை சூடிக்கொண்டது.

32 அணிகள் பங்கபற்றிய இந்த தொடர் முதன் முறையாக தீவகத்தில் மின் ஒளியில் தீவக உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், வேலணை பிரதேச நிர்வாக செயலாளர் ஞானமூர்த்தி உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Related posts:

தென்னைக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம், பனைக்கு வழங்கப்படவேண்டும் -  நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி ...
எமது மக்கள் நான் பயணிக்கும் பாதையை பலப்படுத்துவார்களாயின்தமிழ் மக்களின் எதிர்காலத்தை வெற்றிகொண்டு சா...
காலத்திற்கேற்ப தேவைகளை இனங்கண்டு, அவற்றை இயன்றளவு பூர்த்தி செய்யும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமை...

அசௌகரியங்களை எதிர்கொ ள்ளும் மக்களுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுத்தரவேண்டும் - ஆளுநரிடம் டக்ளஸ் தேவ...
கௌதாரிமுனை இலங்கை - சீன கூட்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்திற்கு...
இரண்டு வாரத்திற்குள் வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம் - அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ...