அதிவேக வீதிகளை நிர்மாணிப்பதற்கு அரச தனியார் பொருளாதார மாதிரி அவசியம் கிடையாது!
Monday, October 16th, 2017
அதிவேக வீதிகளை நிர்மாணிப்பதற்காக அரச தனியார் பொருளாதார மாதிரி அவசியம் இல்லையென அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சண்டே டைம்ஸ் பத்திரிகையில் நாமினி விஜேதாஸ அது தொடர்பில் இன்று செய்தி அறிக்கையிட்டுள்ளார். நாட்டில் அதிவேக வீதிகளை அமைக்கும் போது அரச மற்றும் தனியார் பிரிவு இணைந்த பொருளாதார மாதிரியொன்றின் அவசியம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது.
அதன்படி இறுதி தீர்மானத்திற்கு செல்ல முன்னர்இ குழுவொன்றை நியமித்து சிபாரிசுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவை உபகுழுவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற மன்னாரில் 20 பேர் கைது !
2000 ரூபா நிவாரண பணம் கிடைக்காதவர்கள் பிரதேச செயலாளர்களிடம் முறையிடலாம் - பொருளாதார மறுமலர்ச்சி மற்ற...
தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானம் இல்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
|
|
|


