பிரபல பாடசாலையொன்றின் மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
Thursday, October 12th, 2017
பிரபல பாடசாலை ஒன்றின் மாணவனான நுமுதீத் ஆதித்ய (17 வயது) எனும் மாணவன் துப்பாக்கியினால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவனின் தந்தைக்கு சொந்தமான ‘போரா 12’ எனும் துப்பக்கியினாலேயே சுட்டுக் கொண்டுள்ளதாக பொத்தல பொலிசார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவிக்கின்றனர்.
காலி பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் குறித்த மாணவன், காலி, பொத்தல யோஹித மாவத்தையில் வடரக பிரதேசத்தினை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.
நேற்று(10) மாலை குறித்த தற்கொலை இடம்பெற்றுள்ளதுடன், தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், தற்போது சடலம் காலி, கராப்பிட்டி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டி வைத்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
இதுவரை 2 இலட்சத்து 57 ஆயிரத்து 477 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் - கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்ப...
யுக்ரைனிய சுற்றுலாப் பயணிகளின் நுழைவு அனுமதியினை நீடிப்பது குறித்து அரசாங்கம் அவதானம்!
மலையக மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொள்வதை ஏற்கிறேன் - அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
|
|
|
செப்டம்பர் 20 ஆம் திகதிமுதல் 6 மாதங்களுக்குள் உள்ளூட்சித் தேர்தலை நடத்த முடியும் – தயாராகி வருவதாக த...
எரிபொருள் விலை திருத்தத்தை மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள நடவடிக்கை - எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக...
வெளிநாட்டு கையிருப்பு 3.6 டொலர் பில்லியன்களாக உயர்ந்துள்ளது - அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவிப்பு!


